தஞ்சாவூர், நவ.13- தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையப் பகு திக்குட்பட்ட ரயில் நிலையம், காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கடந்த ஓராண்டு காலமாக செல்போன்களை தவறவிட்டவர்கள் காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்க ளோடு புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் ஐஎம்இஐ நம்பரை வைத்து தேடினர். இதில், தமிழகத்தின் பல இடங்களில் இந்த செல் போன்களை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த செல் போன்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்ப டைக்கும் நிகழ்வு மேற்கு காவல் நிலை யத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் செல்போன்களை தவறவிட்ட 50 பேரிடம் ரூ.5 லட்சம் மதிப்பிலான செல் போனை காவல் துணை கண்காணிப்பாளர் பி.என்.ராஜா ஒப்படைத்தார். அப்போது அவர் கூறுகையில், “செல் போன்களை எப்போதும் ரசீது உடன் வாங்குங்கள். காணாமல் போனாலோ, வழிப்பறி செய்யப்பட்டாலோ, தவற விட்டாலோ உடனடியாக உரிய ஆதா ரங்களோடு புகார் அளித்தால் அதனை மீட்டு ஒப்படைக்கப்படும். இதற்கு நவீன தொழில்நுட்பங்கள் கைகொடுக்கின்றன. யாரும் குறைந்த விலையில் செல்போன் கிடைக்கிறது என நம்பி மற்றவர்களின் செல்போனை வாங்கி ஏமாந்துவிட வேண்டாம். ஏனென்றால், அவை திருட்டு செல்போன்களாககூட இருக்கும். எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண் டும்” என அறிவுறுத்தினார்.