தஞ்சாவூர், மார்ச் 22- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர வர்த்தகர் கழக அலுவலகத்தில், காவல்துறை - வர்த்தகர்கள் ஆலோச னைக் கூட்டம், கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர் எஸ்.டி.டி.சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், காவல்துறை உதவி ஆய்வாளர் ராம்குமார் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘பேரா வூரணி நகரின் அமைதி, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வர்த்தகர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, வியாபாரிகள் தங்கள் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சட்ட விரோதச் செயல்கள் நடைபெற்றால், தயங்காமல் காவல்துறைக்கு தகவல் தர வேண்டும். வியாபாரிகள் தங்கள் 18 வயதுக்கு குறைந்த, உரிமம் பெறாத பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனு மதிக்கக் கூடாது’’ என்றார். இதில், கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.கந்தப்பன், மரு.மு. சீனிவாசன், முன்னாள் தலைவர்கள் பி.எஸ்.அப்துல்லா, ஆர்.பி.ராஜேந்திரன், காவல்துறை தனிப்படை அலுவலர் பாலமுருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.