districts

நீர்மோர் பந்தல் திறப்பு

பாபநாசம், மே 4 -  தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே இரும்புதலை யில் ஊராட்சி மன்றம் சார்பில் கோடை வெயிலின் கடுமையை  கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி நீர் மோர் பந்தல் திறப்பு நடந்தது. நிகழ்ச்சியில் அம்மாபேட்டை ஊராட்சி  ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் நீர் மோர்  பந்தலை திறந்து வைத்தார். இதில் ஊராட்சி மன்றத் தலை வர் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ், மாவட்டக் கவுன்சிலர் ராதிகா, ஒன்றியக் கவுன்சிலர் வள்ளி கலந்து கொண்டனர்.