தஞ்சாவூர், ஏப்.28- தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணியில் இருந்து பட்டுக் கோட்டை செல்லும் சாலையில், செல்வவிநாயகபுரம் பூனைக் குத்தி காட்டாற்று பாலத்தில் சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை யில் குறுகலான பூனைகுத்தி காட்டாறு உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் மழை பெய்யும் சமயங்களில் இப்பாலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் போக்கு வரத்து துண்டிக்கப்படும். இதனால் செல்வ விநாயக புரம், ஆண்டவன் கோயில், இந்திரா நகர், தென்னங்குடி, கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பேராவூ ரணி வர இயலாமல் தவித்து வரு கின்றனர். இந்தச் சாலை வழியாக பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிதிவண்டியில் சென்று வருவது குறிப்பிடத் தக்கது. இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் எதிரில் வாகனத்திற்கு வழிவிடுவ தற்காக தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும், விபத்துகள் நடை பெறாமல் தடுக்க உடனடியாக புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டி கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.