districts

img

குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

பாபநாசம், நவ.5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்றா கும். இந்தச் சாலை கும்பகோணம் மகாமகத் திற்கு முன்னர் போடப்பட்டதாகும். சாலை  போட்டதிலிருந்தே குண்டும், குழியுமாவ தும், அதில் பேட்ச் ஒர்க் என்ற பெயரில் ஜல்லி,  மணலைப் போட்டு மூடுவதுமாக உள்ள னர்.  பேட்ச் ஒர்க்கும் தரமாகப் போடாததால் மழை பெய்யும் போது சாலை மீண்டும் குண்டும், குழியுமாகி விடுகிறது. இதனால் இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டி கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைநீர் தேங்கினால் பள்ளம் எங்கே உள்ளது என தெரியாமல், விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. இந்தச் சாலையை தஞ்சாவூரை அடுத்த பள்ளியக்கிரகாரத்திலிருந்து கும்ப கோணத்தை அடுத்த தாராசுரம் வரை அகலப்படுத்தி தரமாகப் போட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.