திருச்சிராப்பள்ளி, ஜன.7 - திருச்சி பாலக்கரை அருகே முதலியார் சத்திரத்தில் ரயில்வே குட்ஷெட் உள்ளது. இங்கு சரக்கு ரயில்களில் வரும் நெல், உரம், கோதுமை போன்ற மூட்டைகளை தொழிலா ளர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்புவர். இப்பகுதியில் உள்ள சாலை ரயில்வே கட்டுப் பாட்டில் உள்ளது. இந்த சாலை சேதம டைந்து பல ஆண்டுகளாக குண்டும், குழியு மாக உள்ளது. இதனால் இந்த சாலையில் லாரிகள் செல் லும்போது லாரியில் ஏற்றப்பட்டுள்ள மூட்டை கள் சரிந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்கக்கோரி லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை இந்த சாலையில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியின் அருகில் இருசக்கர வாகனத் தில் சென்றவர் மேல் பத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சரிந்து விழுந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் நெல் மூட்டைகளை அகற்றி அவரை மீட்டனர்.
மூட்டைகள் மேலே விழுந்ததால் மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். இதையடுத்து திருச்சி குட்ஷெட் பாரம் சுமக்கும் தொழிலாளர் சங்க செயலாளர் சிவக்குமார் தலைமையில் குட்செட் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் பாலக்கரை - மேலப் புதூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பாலக்கரை போலீசார் மற்றும் ரயில்வே நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில், ரயில்வே அதிகாரிகள் 2022 மார்ச் மாதத்திற்குள் இச்சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றி அமைப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.