districts

img

‘பாஜகவினரையே அதிர்ச்சியடையச் செய்த பட்ஜெட்’

ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், எந்தத் தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கக்கூடிய வகையில் அறி விப்புகள் இல்லை. இந்த நிதி நிலை அறிக்கை ஒரு வெற்று அறிக்கை. இதற்கு பிறகு நேரடி யாக பா.ஜ.க தேர்தலைச் சந்திக்கும் என்ற நிலை யில், புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அனைவரையும் ஏமாற்றக்கூடிய வகையில், பா.ஜ.க.வினரே அதிர்ச்சியடையக் கூடிய வகை யில் ஒன்றும் இல்லாததாக நிதிநிலை அறிக்கை உரை அமைந்துள்ளது. தேர்தலைச் சந்திப்பதில் மிகப்பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒவ் வொன்றாக அழைத்து தி.மு.க., தேர்தல் குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் விடு தலை சிறுத்தைகள் கட்சியும் பங்குபெறும். 

பாஜக, அதிமுக இடையேயான கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என்பதால்தான் சிதறிப்  போனது. அதிமுக மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் யார்யார் இன்னும் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது.

தஞ்சாவூரில் வியாழக்கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதில் இருந்து...