districts

முடச்சிக்காடு அரசு கல்லூரி அருகே பாலப் பணிகள் என்.அசோக்குமார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

தஞ்சாவூர், ஜூலை 30-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு ஊராட்சியில், பாலப்பணி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - சமத்துவபுரம் இடையே பூனைகுத்தியாறு என்ற காட்டாறு உள்ளது. இதில் நீண்ட காலமாக தரைப்பாலம் உள்ளது. மழைக்காலங்களில் தரைப்பாலத்தை தாண்டி வெள்ளநீர் ஓடுவதால், இவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அரசுக் கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. மேலும் இவ்வழியாக செல்லும் சுற்றுவட்டார கிராமங்களில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதையடுத்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார். பின்னர், இப்பகுதியில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு உயர்மட்டப் பாலம் அமைக்க ரூ. 4 கோடி நெடுஞ்சாலைத் துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை பூனைகுத்தியாறு தரைப்பாலம் அருகே தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பாலப் பணியை தொடங்கி வைத்தார்.