கும்பகோணம், அக்.6- கும்பகோணத்தில் தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழ கத்தின் தஞ்சை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முதல்வன் தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர்கள் சேகர், வடிவேல், ஜெக தீசன், அல்லி, சாரதி, பிரகாஷ், ராமசுப்பிர மணியன், முத்துசாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் மணியரசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளி களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை மாணவர்களின் கற்றல் பணி பாதிக்கா தவகையில் உடனடியாக வழங்கிட வேண்டும், பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ள தலைமையாசிரியர்களை பணியிட நீக்கம் செய்வதில்லை என தமிழக அரசு ஆணை பிறப்பித்த பின், சில தலைமை யாசிரியர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டி ருப்பதை உடனடியாக ரத்து செய்திட வேண்டும், பட்டுக்கோட்டையை மீண்டும் கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.