தஞ்சாவூர், மார்ச் 9- திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் கள், தலைவர்கள் மீதும், கட்சியினர் வீடுகள், கட்சி அலுவலகங்கள் மீதும் பாஜக, ஆர்எஸ்எஸ் குண் டர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எஸ்.கந்தசாமி தலை மை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்க ஒன்றி யச் செயலாளர் எம்.வெங்க டாசலம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்டச் செயற்குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.