தஞ்சாவூர், ஏப்.9 - மத்திய அரசின் 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், ‘ஒரு நிலை யம் ஒரு தயாரிப்பு’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் உள்ளூர் கைவினைப் பொருட்கள், கலை பொருட்கள் விற்ப னையை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு ஒவ் வொரு ரயில் நிலையங்களி லும் அதற்கான விற்பனை அரங்குகள் அமைக்க திட்ட மிடப்பட்டது. இந்த திட்டத் தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் நிலை யங்களில் அந்தந்த உள்ளூர் பொருட்களை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 6 ரயில்வே கோட் டங்களில் முதற்கட்டமாக கோட்டத்துக்கு ஒன்று வீதம் 6 ரயில் நிலையங்களில் கை வினைப் பொருட்கள் விற்பனை அரங்கு திறக்கப் பட்டது. அதில், திருச்சி ரயில்வே கோட்டத்தின் கீழ், இந்த திட்டத்தில் தஞ்சாவூர் ரயில்வே நிலையம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலை யில் தஞ்சை ரயில் நிலையத் தில் தஞ்சையின் கலை, கலாச்சாரம், பாரம்பரி யத்தை உணர்த்தும் வகை யில் புவிசார் குறியீடு பெற்ற நெட்டி அரங்கு அமைக்கப் பட்டது. இந்த கைவினைப் பொருட்கள் விற்பனை பிரத் யேக அரங்கை திருச்சி கோட்ட முதன்மை வணிக மேலாளர் செந்தில்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தஞ்சை நிலைய மேலாளர் சம்பத் குமார், அரங்க ஒருங்கிணைப் பாளர் ஓவியர் மணி வண்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
இந்த அரங்கில் நெட்டியால் தயார் செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்க நாதர் சிலை, ராஜராஜ சோழ னுடன் கூடிய பெரிய கோவில், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீரா மர், நாகூர் தர்கா, முனீஸ் வரன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் கோபுரங்கள் மற்றும் நெட்டியால் தயார் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்காக காட்சிப் படுத்த ப்பட்டிருந்தன. இதனை ரயில் நிலை யத்திற்கு வந்த பயணி கள், பொதுமக்கள், சுற்று லாப் பயணிகள் என ஏராள மானோர் பார்வையிட்டு நெட் டியால் தயார் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி சென்ற னர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், கோட்டத்துக்கு ஒரு ரயில் நிலையம் வீதம், தமிழ கத்தில் 6 ரயில் நிலையங்க ளில் உள்ளூர் பொருட்களின் விற்பனை அரங்கு தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி கோட்டத்தில் தஞ்சை ரயில் நிலையம் தேர்வு செய்யப் பட்டு சனிக்கிழமை முதல் புவிசார் குறியீடு பெற்ற நெட்டி கைவினை பொருட் கள் விற்பனை அரங்கு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த அரங்கு இன்னும் 15 நாட்களுக்கு ரயில் நிலை யத்தில் செயல்படும்.
அதன் பின்னர் அவற்றை தொடர் வது குறித்து முடிவு செய்யப் படும். மேலும் மற்ற ரயில்வே நிலையங்களிலும் கைவினைப் பொருட்கள், கலைப்பொருள் விற்பனை அரங்கு தொடங்க உத்தே சிக்கப்பட்டுள்ளது. அப்படித் தொடங்கும் பட்சத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ள ஊரில் எந்த பொருள் சிறப்பு வாய்ந்ததோ அந்தப் பொருள் விற்பனைக்காக வைக்கப்ப டும். இதன் மூலம் கைவி னைப் பொருட்களை தயா ரித்து விற்பவர்களின் வாழ்வாதாரம் உயரும். மேலும் உள்ளூர் கலைப்பொருட் களை நாடறிய செய்ய முடி யும்” என்றனர். ரயில் நிலையத்தில் நெட்டி விற்பனை அரங்கு வைத்துள்ள தஞ்சையை சேர்ந்த தம்பதி ராதா- எழில்விழி கூறுகையில், ஒன்றிய அரசின் இந்த திட்டம் மூலம் எங்களின் வாழ்வாதா ரம் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் புவிசார் குறியீடு பெற்ற நெட்டியின் புகழ் வெளியூர், வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கும் தெரியவரும். இந்த அரங்கில் ரூ.100 முதல் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள நெட்டியால் தயார் செய்யப்பட்ட பொருட் கள் விற்பனைக்காக வைக்கப் பட்டுள்ளன என்றனர்.