districts

மானியத்தில் உரம் பெற சாதி பெயர் கேட்பதா? ரத்து செய்ய விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர், மார்ச் 6-  மானியத்தில் உரம் பெற  சாதி பெயரை கேட்பதை ரத்து செய்ய வேண்டும் என  ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா ளர் சாமி. நடராஜன் கூறுகை யில், ‘‘விவசாயிகள் மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வரும் ஒன்றிய அரசு, மானிய விலையில் உரங்களை வாங்குவதற்கு விவசாயிகள் சாதி குறித்த  விவரத்தை தெரிவிக்க வேண்  டும் என உத்தரவிட்டுள்ளது.  விவசாயிகளுக்கு அடி யுரமான டி.ஏ.பி., மேலுர மான யூரியாவை மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. மானிய விலை யில் உரக்கடைகளில் உரங்  களை விவசாயிகள் வாங்கு வதற்கு ஆதார் அட்டை நகலை கொடுத்து வருகின்றனர். கடந்த 2023, பிப்ரவரி 21  ஆம் தேதி மானிய விலையில் உரக்கடைகளில் உரங்களை வாங்கிட ஆதார் நகலுடன் விவசாயிகள் தனது சாதி பற்றிய விவரத்தையும் தெரி விக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவில் குறிப்பிட் டுள்ளது.  விவசாயிகள் உரத்தை  வாங்குவதற்கு சிட்டாவை யும், ஆதார் நகலையும் காண்பித்தால் போதும். சாதி  குறித்த விவரத்தை ஏன் தெரி விக்க வேண்டும்? தற்போது  இந்த தகவலை உரக்கடைக்  காரர்கள் உரம் வாங்கச் செல் லும் விவசாயிகளிடம் கூறும் போது விவசாயிகள் வேத னையும், அதிர்ச்சியும் அடைந்து வருகின்றனர். வேளாண் துறைக்கான நிதியை நிகழாண்டு பட்ஜெட்  டில் ஒன்றிய அரசு வெகுவாக  குறைத்துள்ளது. உரத்துக் கான மானியத்தையும் பட்  ஜெட்டில் குறைத்துவிட்டனர்.  இந்நிலையில், மானிய விலையில் உரங்களை வாங்கிட விவசாயிகள் சாதி யை குறிப்பிட வேண்டும் என  ஒன்றிய அரசு உத்தரவிட்டுள் ளதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதை மாநில அரசும் வலியுறுத்த வேண்டும்’’ எனத் தெரி வித்துள்ளார்.

;