தஞ்சாவூர், ஜூலை 6- தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022–ம் ஆண்டு குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கப்படவுள்ளன. இதன்படி, அதிகபட்சமாக நெல் நாற்று நடவு செய்யும் சிறிய வகை இயந்திரங்களுக்கு ரூ.1.50 லட்சம், நெல் நாற்று நடவு செய்யும் பெரிய வகை இயந்திரங்களுக்கு ரூ.5 லட்சம், வைக்கோல் கட்டும் கருவிகளுக்கு ரூ.2.50 லட்சம், களையெடுக்கும் இயந்திரங்களுக்கு ரூ.63 ஆயி ரம், அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.11 லட்சம், பவர் டில்லர்களுக்கு 85 ஆயிரம் மற்றும் உழுவை இயந்தி ரங்களுக்கு ரூ.5 லட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு தாழ்த்தப்பட்ட மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியம், இதர விவசாயிகளுக்கு 40 விழுக்காடு மானியம் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியம் பின் ஏற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் வேளாண் இயந்தி ரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட விருப்பமுள்ள தஞ்சா வூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திரு வோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சா வூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மனோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்-613 004 என்ற முகவரியிலும், கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவிசெயற்பொறியாளர்(வே.பொ) அலு வலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திரு விடைமருதூர் தாலுகா, கும்பகோணம் - 612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டாரங்களை சார்ந்த விவ சாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறி யாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை - 614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு தங்களது விண் ணப்பத்தினை அலுவலக நேரங்களில் நேரடியாக சமர்ப்பித்து மூதுரிமை அடிப்படையில் பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.