districts

img

உயர வளர்ச்சி தடைபட்டோர் அனைவரையும் கடும் ஊனமுற்றோர் பட்டியலில் இணைத்திடுக! மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு

தஞ்சாவூர், அக்.20 -  ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 25-ஆம் தேதி,  உயரம் வளர்ச்சி குறைவாக உள்ளவர்களின் உலக தின மாக அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி, தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளரிடம், உயரம் வளர்ச்சி குறைபாடு உடையவர்களுக்கான, சிறப்பு கோரிக்கைகளை முன்வைத்து சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா ளர் ஜி.சரவணன் தலைமை யில், உயர வளர்ச்சி குறை பாடு உடைய 20 மாற்றுத் திறனாளிகள் மனு அளித்த னர்.  “அடையாளச் சான்று கேட்டு விண்ணப்பித்த, உயர வளர்ச்சி தடைபட்டோர் அனைவருக்கும் உடனே அடையாளச் சான்று வழங்க வேண்டும். உயர வளர்ச்சி தடைபட்டோர் அனைவரை யும் கடும் ஊனமுற்றோர் பட்டியலில் இணைக்க வேண்டும். படித்து பட்டம் பெற்ற உயர வளர்ச்சி தடை பட்டோர் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும். பேருந்துகளில் உயர வளர்ச்சி தடை பட்டோர் ஏறும் வகையில் தாழ்வாக படிக்கட்டு அமைக்க வேண்டும்.  பேருந்து, ரயில் நிலை யங்களில் உயரம் குறை வான டிக்கெட் கவுண்டர்கள் ஏற்படுத்த வேண்டும். உரிய வகையிலான கழிப்பறை வசதி அமைத்து தர வேண் டும். மாத உதவித்தொகை ரூ.5000 வழங்க வேண்டும். பண்டிகை காலங்களில் சிறப்பு உதவி தொகை வழங்க வேண்டும். மூன்று சக்கர வாகனங்கள் வழங்க வேண்டும்’’ என்று கோரிக் கை மனுவில் கூறப்பட்டுள் ளது.  நிகழ்வில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்டத் தலைவர் டி.கஸ் தூரி, மாவட்ட துணைத் தலை வர் பழ.அன்புமணி, மாவட்டக் குழு உறுப்பினர் கள் பி.கிறிஸ்டி, நீலாவதி ஆகியோர் கலந்து கொண்ட னர்.
மயிலாடுதுறை 
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, லெட்சுமி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்டத் தலை வர் டி.கணேசன், மாவட்டச் செயலாளர் புருஷோத்த மன் ஆகியோர் பேசினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக் கப்பட்டது.