தஞ்சாவூர், பிப்.6- தஞ்சாவூரில் அகில இந் திய அளவிலான 11-ஆவது சிட்டிங் பாரா வாலிபால் போட்டி கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலி சங்கம், தஞ்சா வூர் மாவட்ட பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அகில இந் திய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான 11-ஆவது சீனியர் சிட்டிங் பாரா வாலி பால் போட்டி, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்க லைக்கழக உள்விளையாட் டரங்கில் நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணி முதலிட மும், கர்நாடகா அணி இரண் டாமிடமும், தமிழ்நாடு மற் றும் ஹரியானா அணிகள் மூன்றாமிடமும் பிடித்தன. ஆண்கள் பிரிவில் கர் நாடக அணி முதலிடத்தை யும், தமிழ்நாடு அணி 2-ஆம் இடத்தையும், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் அணி கள் 3-ஆம் இடத்தையும் பிடித்தன. தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு அணிகளிலிருந்தும் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெ டுக்கப்பட்டு பாரா ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைக் கப்படுவர். வெற்றி பெற்ற அணி களுக்கு இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கியின் கோப்பைகளை பரிசாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் வழங்கினார். நிகழ்ச்சி யில் தமிழ்நாடு பாரா வாலி சங்க மாநில தலைவர் மக் கள் ஜி.ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.