districts

img

நாடியம் ஊராட்சிக்கு கூடுதல் டிரான்ஸ்பார்மர்: காணொலியில் முதல்வர் தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர், நவ.8 -  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம் நாடியம் ஊராட்சி யில் ரூ.1.89 கோடியில் அமைக்கப்பட்ட கூடுதல் டிரான்ஸ்பார்மரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொ லிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.  குருவிக்கரம்பை, நாட்டாணிக் கோட்டை துணை மின் நிலையங்கள் மூலம் மின்வசதி பெறும் கழனிவாசல், உடையநாடு, வாத்தலைக்காடு, ஆத னூர், பேராவூரணி நகர் உள்ளிட்ட பகுதி மக்கள், தடையில்லா மின்சார வசதி பெறும் வகையில் நாடியத்தில் ஏற்க னவே இருந்த இரண்டு டிரான்ஸ்பார்மர் களுடன், கூடுதலாக 110/33 கேவிஏ, 16 எம்விஏ திறனுடைய டிரான்ஸ் பார்மரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சியில் தொடங்கி வைத்தார்.  நாடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், சேதுபாவாசத்திரம் ஒன்றி யக்குழு தலைவர் முத்துமாணிக்கம், உதவி செயற்பொறியாளர் கமலக் கண்ணன், உதவி மின் பொறியாளர் அருண்டேல் மற்றும் நாடியம் பிரிவு மின் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.