districts

திருப்புறம்பியம் சாலையில் விபத்தைத் தவிர்க்க கிராவல் மண் கொட்ட வேண்டும் சிபிஎம் கோரிக்கை

கும்பகோணம், மார்ச்.3- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருப் புறம்பியம் சாலையின் இரு புறங்களிலும் கிராவல் மண் கொட்டி விபத்தை தடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்னம்பூர் கிளை கூட்டம் கிளை செய லாளர் செல்வராஜ் தலைமையில் நடை பெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன், மாவட்ட குழு உறுப்பி னர் நாகராஜன், ராதா, ஒன்றிய செயலாளர் ஜேசுதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், திருப்புறம்பியம் சாலை யோரங்களில் பள்ளங்களாக உள்ளதால், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் உள்ளது. எனவே, இன்னம்பூர், புளியம்பட்டி பகுதி களில் கிராவல் மண் கொட்டப்பட வேண்டும்.  இன்னம்பூர் புள்ளம்பாடி கிராம மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கு பாதை அமைத்து, மழை நேரங்களிலும் தகனம் செய்ய கூடுதலாக ஒரு மயான கூடம் அமைக்க வேண்டும். 100 நாள் வேலையை தடைபடாமல் அனைவருக்கும் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.