கும்பகோணம், ஜன.12- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநக ராட்சி சார்பில் குப்பை இல்லா கும்ப கோணம் என்கிற நிலையை உருவாக்க ‘புகை யில்லா போகி’ என்ற தலைப்பில் கும்ப கோணம் மகாமக தென்கரையில் கோலப் போட்டி நடைபெற்றது. கோலப் போட்டியில் அன்றாடம் சேக ரிக்கப்படும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்கா தரம் பிரித்து குப்பைகளை அதற்காக நியமிக்கப்பட்ட பணியாளர்களிடம் பிரித்து வழங்குவது குறித்தும் தடை செய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்தாமல் இருப்பது பொங்கல் திருநாளில் புகையில்லா போகி கொண்டாடுவதற்கும் சுகாதாரத்தை கடைப் பிடிப்பது உள்ளிட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாநகர மேயர் சரவ ணன் துணை மேயர் சுப.தமிழழகன், மாநக ராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரேமா, மாநகராட்சி பொது சுகாதார குழு தலை வர் தட்சிணாமூர்த்தி, மண்டல தலைவர் ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.