பேராவூரணி, ஜன.21- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், பாரதி கலை இலக்கியப் பேரவை சார்பில் மகாகவி பாரதியார் சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. பேராவூரணியில் சமூக முற்போக்கு சிந்த னையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பான, பாரதி கலை இலக்கியப் பேரவை அமைப்பின் சார்பில், 5 அடி உயர உருவச்சிலை மற்றும் பீடம் நான்கரை அடியென மொத்தம் ஒன்பதரை அடி பாரதியாரின் உருவச்சிலை அமைக் கும் பணி நிறைவுற்ற நிலையில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா பாரதியின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து, எம்.எஸ்.விழா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாரதி கலை இலக்கியப் பேரவை தலைவர் கே.வி. கிருஷ் ணன் தலைமை வகித்தார். செயலாளர் புலவர் சு.போசு வரவேற்றார். இதில் சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், மா.கோவிந் தராசு, பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. மகேந்திரன், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் சி. இராமலிங்கம், அதிமுக பேச்சாளர் கா. அறிவழகன் ஆகியோர் பேசினர். இதில், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா சிறப்புரையாற்றினார். பொரு ளாளர் பாரதி வை.நடராஜன் நன்றி கூறி னார்.
பாரதி கண்ட புதுயுகம்
முன்னதாக, பேராசிரியர் சாலமன் பாப்பையா செய்தியாளர்களிடம் பேசுகை யில், ‘‘கழனியில் உழுகின்ற உழவர்களுக் காகவும், கைத்தொழிலாளிகளுக்காகவும், பாட்டாளிகளுக்காகவும் தன் கவிதையை யும், தன் அறிவையும் செலவழித்தவர் பாரதியார். இந்த மண்ணிலே மிகப்பெரிய மாற்றம் நிகழ வேண்டும் என எதிர்பார்த்த மாபெரும் கவிஞன் பாரதி. அவர், ஏழை களின் கவிஞன், பாட்டாளிகள், உழைப்பாளி களின் கவிஞன். அந்த கவிஞனை கொண்டாடுவது மட்டு மல்ல, ஊர் ஊருக்கு சிலையை எடுத்து வைத்து அவரை அறிமுகப்படுத்தி, வருகிற தலைமுறை புரிந்து கொள்வதற்கும், அவரது இலக்கியங்களிலே பயணிப்பதற்கும், பய ணித்தவர்கள் அதன்படி பாடுபடுவதற்கும், வாழ்க்கையை அமைப்பதற்குமான வழியை செய்கிற தொண்டினை பேராவூரணி மக்கள் சிறப்பாக செய்துள்ளனர். ‘பாரதி கண்ட புதுயுகம்’ வருவதற்கு முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் வரவில்லை. அதற்காக நானும் நீங்களும் பாடுபட வேண்டும்’’ என்றார்.