districts

தஞ்சையில் மார்ச் மாதத்துக்குள் 4ஜி சேவை கிடைக்கும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் தகவல்

தஞ்சாவூர், அக்.2 -  தஞ்சாவூரில் 4 ஜி சேவை மார்ச் மாதத்துக் குள் கிடைக்கும் என பி.எஸ்.என்.எல். நிறுவனத் தின் தஞ்சாவூர் பொது மேலாளர் பால.சந்திரசேனா தெரிவித்தார்.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர்  சனிக்கிழமை தெரிவித்ததாவது: “பி.என்.எல்.என். நிறுவனத்தின் 23 ஆவது  நிறுவன நாளையொட்டி, பாரத் பைஃபர் (எப்.டி.டி.எச்.) ரூ.599 மற்றும் அதற்கும் அதிக மாக உள்ள திட்டங்களில் இணைப்பு பெறும்  புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச வைஃபை மோடம் வழங்கப்படும்.  வாடிக்கையாளர்கள் தங்களது தரை வழித் தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்பை எப்.டி.டி.எச். சேவைக்கு மாற்று பவர்களுக்கு ரூ.200 வீதம் கட்டணத் தொகை யில் சலுகைகளைப் பெறலாம். மேலும் சனிக்கிழமை (அக்.1.) முதல் மாதம் ரூ.499 கட்டணத்தில் எப்.டி.டி.எச். இணைப்புகள் வழங்கப்படும். பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலமாக தஞ்சாவூர் பகுதிகளில் 7598040780 என்ற எண்ணிலும், கும்பகோணம் பகுதி யில் 7598044146 என்ற எண்ணிலும் தகவலை  அனுப்பி புதிய எப்.டி.டி.எச். இணைப்பு களை எளிதில் பெறலாம். ரூ.2,399-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கை யாளர்களுக்கு 395 நாள்கள் செல்லத்தக்க அளவில்லா அழைப்புகள், ஒரு நாளைக்கு 2  ஜிபி டேட்டா, 100 குறுஞ்செய்திகள் ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்கெ னவே திருச்சி, மதுரை, கோவை, சேலம்,  காஞ்சிபுரம், நாகர்கோவில் ஆகிய நகரங் களில் 4ஜி சேவை தொடங்கப்பட்டுவிட்டது.

தற்போது, தஞ்சாவூர் மாநகரில் 44 இடங்களி லும், காரைக்கால் நகரில் 24 இடங்களிலும் 4ஜி சேவைக்கான ஆயத்தப் பணி மேற்கொள் ளப்படுகின்றன. எனவே, தஞ்சாவூர் மாநகரி லும், காரைக்கால் நகரிலும் 2023, மார்ச் மாதத் துக்குள் 4ஜி சேவை கிடைக்க சாத்திய மிருக்கிறது. மேலும், உளூர் கிழக்கு, வீரையன் கோட்டை, அக்கரைப்பேட்டை, திருமலை ராஜபுரம் ஆகிய கிராமங்களில் மத்திய அரசின் யு.எஸ்.ஓ.எப். திட்டத்தின் கீழ் 4ஜி சேவை வழங்கப்படவுள்ளது. பிரிபெய்டு 4ஜி  சிம் கார்டுகள் ரூ.108-க்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு சந்திரசேனா தெரிவித்தார். அப்போது, துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) ராஜ்குமார், உதவிப் பொது மேலாளர்கள் பர்னாலா டிவைன் மேரி ஜோசப் (நிர்வாகம்), கோவி.செந்தில் செல்வி (திட்டம்), ராஜேஷ் (தஞ்சாவூர்), அலு வலர்கள் வெங்கடேசன், ராஜேந்திரன் ஆகி யோர் உடனிருந்தனர்.