தஞ்சாவூர், மார்ச் 29- தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி - கண்டியூர் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந் நி லையில், திருவையாறு அருகே கருப்பூர் கிராமத்தில், குட முருட்டி ஆற்றில் இருந்து பிரியும் அந்தலி தலைப்பு வாய்க்கால் மதகு, சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றி விட்டு, மீண்டும் சிறிது தூரத்தில் புதிய மதகு அமைப்ப தற்காக புதன்கிழமை பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, பள்ளத்தில் 4 அடி உயரம் கொண்ட விநா யகர், அம்மன், வராஹி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த தகவல் அப்பகுதியில் பரவியதை தொடர்ந்து, பெண் களும், பொதுமக்களும் சிலைகளை மஞ்சளால் அபிஷே கம் செய்தனர். பின்னர் மாலை அணிவித்து வழிபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்த திருவையாறு வட்டாட்சியர் பழனியப்பன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, சிலைகளை மீட்டார்.