districts

img

சேலம் சிறைத் தியாகிகளின் 75-ஆவது நினைவு தினம்

சேலம், பிப். 11 - சேலம் மத்திய சிறையில் 1950-ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று அரசியல் கைதி களாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 22 பேரை சிறை நிர்வாகம் கண்மூடித் தனமாக சுட்டுக்கொன்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படு கொலையாக வரலாற்றில் பதிவான சேலம் மத்தியச் சிறைத் தியாகிகள் படுகொலை யின் 75-ஆம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது.

கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. ராமமூர்த்தி தலைமையில், சேலம் மத்திய சிறை முன்பு கொடி ஏற்றி, தியாகிகள் நினைவுச் சுடர் ஏந்தி பேரணி நடைபெற்றது. நினைவு ஜோதியை மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி எடுத்து கொடுத்தார். அஸ்தம்பட்டி, ராம கிருஷ்ணா சிக்னல் வழியாக பேரணி சென்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான சேலம் சிறைத் தியாகிகள் நினைவகத்தில் பேரணி நிறைவடைந்தது.

இதையடுத்து நடைபெற்ற தியாகி களுக்கு செவ்வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி யில், கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை சண்முகராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், சேலம் சிறைத் தியாகி ஆறுமுகம் பிறந்த செங்கொடி பூமியான சேலம் மேற்கு மாநகரம், அரியாக்கவுண்டம் பட்டி கிளை சார்பில், லட்சுமி நகர் கிளைச் செயலாளர் எம்.மூர்த்தி தலைமையில் கொடி யேற்று விழா நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி செங்கொடியை ஏற்றி வைத்தார்.

 தியாகிகளை நினைவு கூர்ந்து கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  டி.உதயகுமார், மேற்கு மாநகரச் செய லாளர் எம்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப் பினர்கள் பி.சந்திரன், பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். இதில் மேற்கு கமிட்டி உறுப்பினர்கள் வி.பிரகாஷ், டி.வெற்றிச்செல்வன், சி.உதயகுமார், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர் ஏ.ஜெய வேல் நன்றி கூறினார்.