districts

img

சேலம்: அரசு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன.6 -  108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்ததை  ரத்து  செய்ய வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட  ஆம்புலன்ஸ்கள் இயக்காமல் வைத்தி ருக்கும் ஜிவிகே நிர்வாகத்தின் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத பணியிடமாறுதல்களை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தி னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.

;