சேலம், டிச.26- சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அரசு வாகன ஓட்டுநர் கள் செயல் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாளை முன் னிட்டு, திங்களன்று பரபரப்பாக காணப்படும். அரசுத்துறை அதிகாரிகளின் பயன்பாட்டிற் காகவும், அலுவலகப் பயன்பாட்டிற்காகவும் பணியாற்றும் அரசு வாகன ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரின் பின்பகுதியில் உள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்தி ஓய்வெ டுத்து வருவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பயன் படுத்தப்பட்டு, தற்போது பழுதான வாகனத் தில் மது அருந்துவது, குட்கா பயன்படுத்து வது போன்ற செயல்கள் அதிகரித்து வரு கிறது. இந்நிலையில், திங்களன்று அந்த பழுத டைந்த வாகனத்தில் அரசு வாகன ஓட்டுநர்கள் சிலர் பணம் கட்டி சீட்டு விளையாடியது அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல றிந்தவுடன் கையும், களவுமாக பிடிக்க செய்தி யாளர்கள், காவல்துறையினர் உதவியுடன் சென்றனர். அப்போது ஓட்டுநர்கள் சீட்டுக் கட்டை போட்டுவிட்டு அலறி அடித்து ஓட் டம் பிடித்தனர். இதனையடுத்து, அங்கிருந்த வாகன ஓட்டுனர்களை காவல் துறையினர் எச்சரிக்கை செய்து அனுப்பினர். மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம் தொடர்ந்து அரசு வாகன ஓட்டுநர்கள் மது குடிப்பது, குட்கா பயன்படுத்துவது, பணம் கட்டி சீட்டு விளையாடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வா கம் உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளா கத்தில் இருந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.