சேலம், செப்.16- நீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் டவுன் பகுதி யில் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே 1.33 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இந்த நிலம் சரபங்கா நதி நீரோடை பகுதியாக இருந்து வந்தது இந்நிலையில், இந்த நிலத்தை அதேபகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் போலி பத்திரம் தயார் செய்து, அதற்காக பட்டாவும் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக் கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து சரபங்கா நதி யின் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தற்பொழுது சேலம் மாவட்ட ஆட்சி யர் மற்றும் ஓமலூர் வட்டாட்சியர், கோட் டாட்சியர் ஆகியோர் இந்த நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்ற னர். இதனை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய குடியரசு கட்சி தலைமையில் வெள்ளியன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து, இந்த இடத்தை மீட்டு தர வேண்டும். நீதிமன்ற உத்த ரவை அமல்படுத்த வேண்டும். இல்லையென் றால் அடுத்த கட்டமாக அனைத்து மக்களும் ஒன்று திரண்டு அதேபகுதியில் குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடு படுவோம், என போராட்டக்காரர்கள் தெரி வித்தனர்.