districts

img

சேலம்: புதிய ஆணையர் பொறுப்பேற்பு

சேலம், ஜூலை 25- சேலம் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக ரஞ்ஜீத் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சேலம் மாநகராட்சியின் 25 ஆவது ஆணையராக ரஞ்ஜீத் சிங் வியாழனன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகராட்சி ஆணையா ளர் அலுவலகத்திற்கு வந்திருந்த அவர், அதற்கான கோப்பு களில் கையெழுத்திட்டார். அப்போது அவருக்கு அரசு அதி காரிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட னர். முன்னதாக, மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு வந்த  அவர் மரக்கன்றுகளை நடவு செய்தார். இதற்கு முன்பு நாகப் பட்டினம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை முகமையின் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த சீ.பாலச்சந்தர் இடமாற் றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரஞ்ஜீத் சிங் சேலம் மாநகராட்சி ஆணையாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.