districts

img

மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவூர், அம்மாபாளையம், புள்ளாகவுண்டம்பட்டி, புளியம்பட்டி, அரசிமணி செட்டிபட்டி, குள்ளம்பட்டி,   ஒடசகரை, காவேரிப்பட்டி,மோட்டூர், வட்ராம்பாளையம், சென்றயனூர், தண்ணீர்தாசனூர், ஒக்கிலிபட்டி , கல்வடங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் சம்பா, ஜெலக்சன், சேலம்ரகம்,எட்டாம் நம்பர்,ராஜமந்திரி, ஒரிசா உள்ளிட்ட பல்வேறு வகையான மஞ்சள் ரகங்களை விவசாயிகள் அதிகளவில்  பயரிடப்பட்டயிருந்தனர் அதனையடுத்து  மஞ்சள் அறுவடை பணி முடித்து அதனை வேகவைத்து வெயிலில் காயவைத்து பின்னர் தற்பொழுது இயந்திரம் மூலம் சலித்து விரலி, குண்டு மஞ்சள் என இரு ரகங்களாக பிரித்தெடுத்தக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்ட போது கடந்த ஆண்டைவிட ஏக்கர் ஒன்றுக்கு 30 முதல் 40 ஆயிரம் வரை செலவுகள் செய்தும் மஞ்சளில் நோய் தாக்கப்பட்டதால் மகசூல் குறைவாக உள்ளதாகவும், மார்க்கெட்டில் சட்டை ஒன்று கடந்த ஆண்டைவிட 1000 முதல் 2000 வரை குறைவாக விற்பனையவதால் மஞ்சள் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் மஞ்சள் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.