இளம்பிள்ளை அருகே காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, பல ஆயிரம் லிட்டர் குடிநீர் தண்ணீர் வீணாகிறது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில் எதிரில் இன்று காலை முதல் காவிரி குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல ஆயிரம் லிட்டர் குடிநீர் தண்ணீர் வீணாகிறது.
இதனால் அருகில் உள்ள கிணறு நிரம்பி வழிகின்றன. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் நடவடிக்கை வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.