districts

img

சேலத்தில் விவசாயிகளின் நிலத்தை அபகரித்த பாஜக நிர்வாகி

சென்னை, ஜன. 1 - பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஏழை விவசாயிகளின் நிலத்தை மோசடி செய்து அபகரித்த பாஜக சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பா ளர் குணசேகரனை கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், குணசேகரனின் மோச டிக்குத் துணைபோகும் வகையில், அதிகார துஷ்பிரயோகம் செய்து விவசாயிகளை மிரட்டியும், சாதி யைக் குறிப்பிட்டும் சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை அதி காரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் கிராமம், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த முதியவர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் கிருஷ் ணன், கண்ணையன் ஆகியோர் ஆவர்.  இவர்களின் 6.50 ஏக்கர் நிலத்தை, பாஜக-வின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குணசேக ரன், தனது பெயருக்கு போலியாக பத்திரப் பதிவு செய்து கொண்டுள் ளார். 

பாதிக்கப்பட்ட  பட்டியலின விவசாயிகள்
ஷ்ணன், கண்ணையன் ஆகியோ ரின் நிலத்தை, குணசேகரன் அடி மாட்டு விலைக்கு வாங்க முற்பட்ட போது அவர்கள் விற்பதற்கு முன் வராததால் காவல்துறை, வருவாய்த் துறை, அமலாக்கத்துறை அதிகாரி களின் துணையோடு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு தனது பெயருக்குபோலிப்பத்திரம் பதிவு செய்துள்ளார்.

விவசாயிகளையும் தங்களின் சொந்த நிலத்தில் விவசா யம் செய்ய முடியாத வகையில் அடி யாட்களை வைத்து கொலைமிரட்டல் விடுத்து அச்சுறுத்தியும் உள்ளார்.  இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டும், தன் மீது  நடவடிக்கை எடுக்காத வகையில், தனது பாஜக அரசியல் பின்னணி மற்றும் கிரிமினல் குற்றப் பின்ன ணியை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.  

கிருஷ்ணன், கண்ணையன் ஆகி யோரின் நிலத்தை அபகரித்தது போல் இப்பகுதியில் ஏராளமான விவ சாயிகளின் நிலங்களையும் அப கரித்துள்ளது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றப் பின்னணி கொண்ட பாஜக நிர்வாகிகள்
தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் கடத்தல், நில அப கரிப்பு என பல்வேறு குற்றப் பின்ன ணிகளை கொண்டவர்கள் பாஜக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். சமீபத்தில் கூட தனது சொந்தக் கட்சிக்காரரான நடிகர் கௌதமி-யின் 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை பாஜக-வினரே அபகரித்தது நாடறியும். இது போன்று தமிழகம் முழுவதும் ஒன்றிய ஆட்சியதிகாரத்தை பயன் படுத்தி பாஜக-வினர் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரித்துள்ள சேலம் பாஜக மாவட்ட பொறுப்பாளர் குண சேகரனை நில அபகரிப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடன் கைது செய்திடவும், இவருக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறை, வருவாய்த்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளை கைது செய்து உரிய முறையில் விசா ரணை மேற்கொண்டு இவரால் அப கரிக்கப்பட்ட நிலங்களை ஏழை விவ சாயிகளுக்கு திரும்ப வழங்கிடவும், கொலை மிரட்டலுக்கு ஆளாகி யுள்ள விவசாயிகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை யும், சேலம் மாவட்ட நிர்வாகத்தை யும் வலியுறுத்துகிறது.

சாதியைக் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை
பாஜக-வால் அமலாக்கத் துறை எப்படி தவறாக பயன்படுத்தப் படுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதிலும் சாதியை குறிப்பிட்டு அம லாக்கத்துறை சம்மன் அனுப்பி யிருப்பது வன்மையான கண்டனத் திற்குரியது. எனவே, பட்டியல் சாதி யை சார்ந்த விவசாயிகளின் நில த்தை திட்டமிட்டு அபகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ள குணசேகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிகார துஷ்பிர யோகத்தில் ஈடுபட்டுள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது. இவ்வாறு கே. பால கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.