districts

img

தரமற்ற உணவு: அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சேலம், மார்ச் 1- தரமற்ற உணவு வழங்கும் கல் லூரி நிர்வாகத்தை கண்டித்தும், மாணவர்கள் மீது தாக்குதல் நடை பெறுவதாகக்கூறி சேலம் அரசு சட் டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், அரியானூர் அடுத்த பெரிய சீரகாபாடி பகுதியில் அரசு சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த  விடுதியில் வியாழனன்று வழங்கப் பட்ட காலை உணவில் பல்லி இருந் ததால், 10க்கும் மேற்பட்ட மாணவிக ளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்நிலையில், தரமற்ற உணவு களை வழங்கி வரும் நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி நுழைவாயில் பகுதியில் அரசு சட்டக்கல்லூரி மாண வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருவ தாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள் ளனர். இதனால் கல்லூரி வளாகத் தில் பரபரப்பு ஏற்பட்டது.