districts

img

மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி 2 பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு

மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி 2 பள்ளி குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சேத்துக்குழியை சேர்ந்தவர் முருகேசன் சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் இவரது தம்பி பெரியசாமி பெரியசாமியின் மகள் பவித்ரா(10) முருகேசன் மகள் காமாட்சி (8) இருவரும் பள்ளி விடுமுறைக்கு சேத்துக் குழியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளனர்

இந்த நிலையில் இன்று காலை கிராமத்திற்கு அருகே உள்ள காவிரியில் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கு பாட்டியுடன் இரண்டு சிறுமிகளும் சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராதவிதமாக இருவரும் ஆழமான பகுதியில் சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் பாட்டி பாப்பாத்தியின் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று குழந்தைகளின் சடலத்தை மீட்டனர்.  தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த கொளத்தூர் போலீசார் இரண்டு சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்

2 பள்ளி சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.