நவம்பர் 7, ரஷ்யா புரட்சி தினத்தையொட்டி “இந்திய அரசியல் வரலாற்றில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு” எனும் தலைப்பில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உத்திரமேரூர் வட்டக்குழு சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் வட்டச் செயலாளர் இ.விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. “நவம்பர் புரட்சி தின வரலாறு” எனும் தலைப்பில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார் பேசினார். காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், செயற்குழு உறுப்பினர் கே.நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.