districts

img

சாதி ஆணவக் கொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றுக சென்னையில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 17 - சாதி ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி‘ வெள்ளியன்று (டிச.17) சைதாப்பேட்டையில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா,  “தமிழகத்தில் தொடர்ந்து சாதி  ஆணவப் படுகொலை நடைபெறு கிறது. அதை தடுப்பதற்கு கடந்த அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாதி என்பது பெருமை அல்ல இழிவு. சாதியின் பெயரால் நடைபெறும் கொலையில் என்ன பெருமை இருக்கிறது? எனவே, புதிதாக பொறுப் பேற்றுள்ள திமுக  அரசு,  ஆணவ படுகொலையை தடுக்க சிறப்பு சட்டத்தை ஜனவரி மாதம் நடைபெற உள்ள  சட்டமன்றக் கூட்டத் தொட ரில்  இயற்ற வலியுறுத்தி தமிழகம்  முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருகிறது” என்றார்.

“பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதி கரித்து வருகிறது. இது தொடர்பாக கொரோனா முதல்  ஊரடங்கு காலத்தில் மட்டும் 14 ஆயிரம் வழக்கு கள் பதியப்பட்டுள்ளது. கல்வி வளாகங்களில் பாலியல் நட்புணர்வு குழு, பணியிடங்களில் புகார் கமிட்டி  அமைப்பது, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது, பாலியல் சமத்துவத்தை கல்வியில் கொண்டு வருவது போன்ற நடவடிக் கைகளை அரசு எடுக்க வேண்டும். போக்சோ சட்டத்தில் கைது செய்தால் 100 நாட்களுக்கு பிணை வழங்க கூடாது. இதனை மீறி திண்டுக்கல் தனியார் கல்லூரி உரிமையாளருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளது. பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்” என்றும் பாலா வலி யுறுத்தினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சுசீந்திரா உள்ளிட்டோர் பேசினர்.