districts

img

விளையாட்டு மைதானத்தை மீட்க வாலிபர் சங்கம் கோரிக்கை

விழுப்புரம், மே 30- கோனூர் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விளையாட்டு மை தானத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், வட்டத் தலைவர் முதலிவீரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்த னர். அதன் விவரம் வரு மாறு:- விழுப்புரம் மாவட்டம், கோனூர் கிராமத்தில் 1,500க்கும் மேற்ப்பட்ட தலித் மக்கள் வசிக்கின்றனர். விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என இளைஞர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, கங்கையம்மன் கோயில் குளத்தின் கிழக்கு பகுதியில் மைதானம் அமைக்கப்பட்டது.  3 வருடங்களுக்கு முன்பு கோனூர் கிராம நாட்டாமை களால், விளையாட்டு மைதானத்திற்கு வழங்கப் பட்ட இடத்தில், கோவில் கட்டுவது என முடி வெடுக்கப்பட்டு ஜல்லி, மணல் இறக்கி வைக்கப் பட்டு ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பள்ளம் எடுக்கப்பட்டது. அப்போது இதுகுறித்து மனு அளிக்கப்பட்டது. இதை யடுத்து அதிகாரிகள் விசா ரணை நடத்தி, கோவில் கட்டக்கூடாது என்றனர். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி ஜேசிபி இயந்திரம் மூலம் கோவில் கட்டுமானப் பணி களுக்கு பள்ளம் எடுத்துள்ள னர். எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனை யில் தலையிட்டு, இளை ஞர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, விளை யாட்டு மைதான ஆக் கிரமிப்புகளை அகற்றி, உபகரணங்களுடன் கூடிய மைதானமாக மாற்றி அமைக்க வேண்டும் என அந்த மனுவில் வலி யுறுத்தியுள்ளனர்.