districts

சென்னையில் உலக கோப்பை ஸ்குவாஷ் அடுத்த மாதம் 13 முதல் 17 வரை நடைபெறுகிறது

சென்னை, மே 22-

    உலக கோப்பை  ஸ்குவாஷ் விளை யாட்டுப்போட்டி சென்னையில் ஜூன் 13 முதல் 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    சென்னையில் நடைபெறும் போட்டியில்  இந்தியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய  மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,ஸ்குவாஷ் உலகக் கோப்பையை நடத்த விளை யாட்டு நகரமான சென்னை தயாராகி வருகிறது.

   தமிழ்நாடு அரசின் நிதியுதவி யுடன் நடைபெறும் இந்த போட்டி, உல கெங்கிலும் உள்ள சிறந்த ஸ்குவாஷ் வீரர்களை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல் கோப்பையினை  வெல்ல  நமது வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

    ஸ்குவாஷ் உலகக் கோப்பைக்கான போட்டிகள்  2011 ஆம் ஆண்டில்   இருந்த நிலையிலிருந்து இப்போது அதன் நான்காவது பதிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்குட்பட்டுள்ளது என்று  உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர், செனா உல்ரிச் கூறினார்.  போட்டிகள் சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளா கத்தில் உள்ள மைய அரங்கில் நடை பெறவுள்ளது.  

  முன்னதாக உலகக் கோப்பை  ஸ்குவாஷ் போட்டி – 2023 நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதற்கட்ட உதவியாக  ரூ. 1.50 கோடிக்கான காசசோலையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் அசோசியேசன்  தலைவர் என். இராமச்சந்திரனிடம் வழங்கினார்.