districts

img

உலக தாய்ப்பால் வாரம் கொண்டாட்டம் வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு விழிப்புணர்வு

சென்னை, ஆக,7-

      உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1  முதல் 7 வரை உலக தாய்ப் பால் வாரம் கடைபிடிக்கப் படுகிறது.  

    இதையொட்டி வேளச் சேரி பிரசாந்த் மருத்து வமனைகளில் ‘தாய்ப்பால்  ஊட்டுவதை வலியுறுத்துதல் வேலைக்கு செல்லும் பெற் றோருக்கு வித்தியாசத்தை ஏற்படுத்துதல்’ என்ற தலைப் பில் ஒரு வாரகால விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தாய்ப் பால் தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் இறுதிப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வர்களுக்கும், மேலும் இதில் கலந்து கொண்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்க ப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக காவல்துறை உதவி ஆணையர் ஷர்மு ராஜன், திரைப்பட இயக்குனர் ரா கார்த்திக், பிரசாந்த் குழும மருத்துவமனைகளின் தலை வர் கீதா ஹரிபிரியா பிரசாந்த் மருத்துவமனைகளின் குழந்தை மருத்துவ துறைத் தலைவர் டாக்டர் விஜய குமார் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் வேலைக்கு செல்லும் தாய்  மற்றும் தந்தை ஆகியோ ருக்கு தாய்ப்பாலின் நன்மை,  அதனால் கிடைக்கும் பயன்கள் உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் குறித்து எடுத்து கூறும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி களும், மருத்துவ நிபுணர்க ள் பங்கேற்ற பயிற்சி பட்ட றைகளும், தாய்ப்பாலூட் டுவது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப் பட்டன.  இதில் மூத்த மகப் பேறு மருத்துவர்கள், பாலூ ட்டுவது தொடர்பான ஆலோ சகர்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான மருத்து வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட அமர்வு களும் இடம் பெற்றன.