ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 22ந் தேதி முதல் பள்ளிக்கரணையில் செயல்பட்டு வரும் கிண்டி மெஷின் டூல்ஸ் (ஜிஎம்டி) நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தின் 8வது நாளாக வெள்ளியன்று (மார்ச் 27) சிஐடியு மூத்த தலைவர் எஸ்.அப்பனு உள்ளிட்டோர் பேசினர்.