சென்னை, டிச, 21 உலகளாவிய தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பான டை (TiE) அமைப்பின் சென்னைக் கிளை சார்பில் இந்த ஆண்டு வழங்கப்பட்ட சிறந்த டைகான் (TiECON) பெண் தொழில்முனைவர் விருதை தென்னிந்தியா வின் முன்னணி மசாலா தயாரிப்பு நிறுவனமாகிய சக்தி மசாலா இயக்குநர் டாக்டர் சாந்தி துரைசாமி பெற்றுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற டைகானின் 16-ஆவது கருத்தரங்கில் இந்த விருது வழங்கப்பட்டது. டை சென்னை அமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சி.கே. ரங்கநாதன். டை சென்னை யின் தலைவரும். இண்டக்ரா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனருமான ஸ்ரீராம் சுப்ரமண்யா இவ்விருதினை சாந்தி துரைசாமிக்கு வழங்கினர். சக்தி மசாலா நிறுவனம் சக்திதேவி அறக்கட்டளையை நிறுவி மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி, சக்தி ஆட்டிசம் சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி ஆட்டிசம் ஆரம்பகால பயிற்சி மையம் ஆகியவற்றின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசக் கல்வி மற்றும் சக்தி மறுவாழ்வு மையத்தின் மூலம் பிசியோ தெரபி, ஆக்குபேஷனல் தெரபி மற்றும் பேச்சுப் பயிற்சி மூலம் சிகிச்சைகளையும், பயிற்சிகளையும் வழங்குகிறது. 23 வருடங்களாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையையும் வழங்குகிறது.