districts

img

மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா

விழுப்புரம்,செப்.15- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சி புரத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து,  உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி  தலைமையில் அர கண்டநல்லூர் பேரூ ராட்சி லுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், நடந்த விழாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1,000  பெறு வதற்கான வங்கி பற்று அட்டையை வழங்கினார். அப்போது விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, இரா. லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலு வலர்  மு.பரமேஸ்வரி,

அர கண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில்  நடந்த கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சி யர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் வர வேற்றார். வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை  அட்டையை வழங்கி தொடங்கி வைத்தார் .  அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் ராம. கதிரேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், ம.சிந்தனைசெல்வன், மாவட்ட வருவாய் அலு வலர் ராஜசேகரன், பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர்  கலந்து கொண்டு பேசினர். திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் தச்சம்பட்டு அரசு பள்ளியில் நடைபெற்ற மகளிர் உரிமை திட்ட நிதி வழங்கும் விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிதியை வழங்கினார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் பா. முரு கேஷ், கூடுதல் ஆட்சியர் ரிஷப், சட்டமன்ற உறுப்பி னர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.