districts

img

கண்ணீர் அஞ்சலியுடன் இராமு உடல் தகனம்

சென்னை, ஜூன் 28 முற்போக்காளர்களின் கண்ணீர் அஞ்ச லியுடன் நாடக, திரைப்பட கலைஞர் ராமு உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், நாடக, திரைப்பட கலைஞருமான பூ. இராமு சென்னையில் திங்களன்று (ஜூன் 27) மாலை காலமானார்.  சென்னைக் கலைக்குழு வாயிலாக கலையுலகில் நுழைந்த அவர் பின்னர் திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகராக முத்திரைப்பதித்தார்.  உடல்நிலை குன்றிய நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல்   சென்னை ஊரப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு  தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுகல் ஐ.லியோனி, மார்க்சிஸ்ட் கட்சியின்  மத்தியக்குழு உறுப்பி னர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் செல்வசிங், கே.கனகராஜ், கே.சாமுவேல்ராஜ், எஸ். கண்ணன், சிபிஎம் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பா.சு.பாரதிஅண்ணா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா, கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இ.சங்கர், மாநில குழு உறுப்பினர்கள் டில்லிபாபு, ரமேஷ்பாபு, ராஜசேகர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  துணைப்பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன்,  தமுஎகச தலைவர்கள்  இரா.தெ.முத்து, சைதை ஜெ, மயிலைபாலு, நாடக இயக்குநர் பிரள யன், கவிஞர் நா.வே.அருள்,  எடிட்டர் பி.லெனின்,  திரைப்பட இயக்குநர்கள் சீனு ராமசாமி, அனந்தகிருஷ்ணன், லெனின், சசி, திரைப்பட கலைஞர்கள் அருள்நிதி, அருள்தாஸ், காளிவெங்கட், பிளாக்பாண்டி, பிரகதீஸ்வரன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர்  பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், வாலிபர்சங்க மாநிலத்துணை தலைவர்கள்  போஸ், மா.பா. நந்தன், பிரியசித்ரா, மாவட்டச்செயலாளர்கள் க. புரு ஷோத்தமன், தீ.சந்துரு, தமுஎகச மாவட்ட தலை வர் சங்கரதாஸ், மாவட்டச்செயலாளர் கவிசேகர், தீக்கதிர் சென்னைப்பதிப்பு முன்னாள் பொதுமேலாளர் சி.கல்யாண சுந்தரம், பொறுப்பாசிரியர் அ.விஜயகுமார், தலைமை நிருபர் ஸ்ரீராமுலு,  மார்க்சிஸ்ட் கட்சியின் ஊரப்பாக்கம் கிளைச் செயலாளர்கள் மணிவேல், ராமானுஜம் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாற்று ஊடக மைய கலைக்குழு , பேசு பறை கலைக்குழு, முகில் கலைக்குழு , சாரல் கலைக்குழு  உள்ளிட்ட கலைக்குழுவை சார்ந்த கலைஞர்கள் பறை இசையுடன் அஞ்சலி செலுத்தினர். ஊரப்பக்கம் மயானத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் தோழர் ராமுவின் உடலுக்கு மூத்த மகள் மகாலட்சுமி தீ மூட்டினார்.