districts

img

வறண்டு வரும் வீராணம் ஏரி

சிதம்பரம், அக்.27- கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் வீரநாராயணன் ஏரி நாளடைவில் வீராணம் ஏரி யாக மாறி விட்டது. இந்த ஏரி லால்பேட்டையில் அமைந்துள்ளது. 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. 5 கிலோ மீட்டர் அகலம் உடைய இந்த ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடி. 1461 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க முடியும். இந்த ஏரியில் 34 மதகுகள் உள்ளன. ஆனால் இந்த ஏரி கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கும் இருப்பினும் ஏரியை முழுமையாக தூர்வாராததால் ஏரியின் மட்டத்தில் சற்று வேறுபாடுகள் இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது. இது தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், செந்துறை, ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீரும் கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக வருகிறது. இருப்பினும் பிரதான நீர் வடவாறு வழியாக வருகிறது. இந்த ஏரியை நம்பி சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் நேரடி யாகவும், 40 ஆயிரத்து 526 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.  சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக இந்த ஏரியில் கோடை காலத்திலும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது.கடந்த 1967 ஆம் ஆண்டு வீராணம் திட்டம் தொடங்கப்பட்டு 235 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.  2004 ஆம் ஆண்டிலிருந்து வீரா ணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நாளொன்றுக்கு 65 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.இந்த ஏரி கடந்த ஆண்டில் 7 முறை நிரம்பியது. இதனால் வீராணம் ஏரியை நம்பியுள்ள விளை நிலங்களில் கடந்த ஆண்டு 3 போகமும் பயிரிடப்பட்டது. மேலும், சென்னைக்கு குடிநீர் தங்கு தடையின்றி சென்றது. ஆனால், இந்த ஆண்டு இந்த ஏரி ஒரு முறை கூட நிரம்பவில்லை. இதற்கு போதிய மழை இல்லை என்று அதிகாரிகளால் கூறப்படு கிறது. அதேசமயம் ஏரிக்கு நீர் வரத்து வாய்க்கால்கள் தூர்ந்து போய் உள்ளது காரணம் என விவ சாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்ற னர். இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் வீராணம் ஏரி வறண்டது. இந்நிலையில் வீராணம் ஏரி யின் நீர்மட்டம் தற்போது கடுமை யாக சரிந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் அளவு 47.50 அடியில் தற்போது 20.50 அடி நீர் மட்டுமே உள்ளது. குறிப்பாக ஏரியின் கரை பகுதியில் மட்டுமே நீர் உள்ளது. ஏரியின் மையப்பகுதி வறண்டு புல் மற்றும் பூண்டு செடிகள் முளைத்துள்ளன.  மேலும், மேடாக உள்ள வீராணம் ஏரிக்கரை ஓரங்களில் வறண்டு வருகின்றன.இதனால் நடப்பு சம்பா பயிரிட போதுமான நீர் கிடைக்காத அபாயம் ஏற்பட்டுள்ளது. நெற்பயிர்களை நாற்று விட்டு நடவு செய்துள்ள நிலை யில் வீராணம் ஏரி வறண்டு வருவது விவசாயிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வீராணம் ஏரி நீர் கிடைக்க வில்லை எனில் நடவு செய்யப் பட்டுள்ள நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. மேலும், சென்னைக்கு குடிநீர் அனுப்பு வதில் சிக்கல் ஏற்பட்டு நாளொன் றுக்கு 30 கன அடி குடிநீர் மட்டும் அனுப்பப்படுகிறது.இதே நிலை நீடித்தால், அடுத்த 15 நாட்க ளுக்குள் வீராணம் ஏரி முழுமை யாக வறண்டு போய்விடும். இதனால் நடப்பு சம்பா பயிரிடும் விவசாயிகள் பாதிக்கப்படு வதோடு, சென்னையில் குடிநீர் பிரச்சனை உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.