சென்னை, மே 14 -
சென்னை மாநகராட்சி யிலுள்ள ஜாபர்கான் பேட்டை, ஆர்.வி.நகர் வாரிய குடியிருப்புகளை புதுப்பித்து கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை சைதாப் பேட்டை சட்டமன்ற தொகுதி, 139வது வட்டம், ஜாபர்கான் பேட்டையில் ஆர்.வி.நகர் உள்ளது. இங்குள்ள தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி 50 ஆண்டுகளாகிறது. 27 அடுக்குமாடிகளில் 666 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அடுக்கு மாடி குடியி ருப்புக் கட்டிடங்கள் வலுவிழந்து, கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.தரைதளங் கள் சாலையை விட 2 அடி தாழ்வாக உள்ளது.
கான் கிரீட் தளங்கள், சுவர்கள் மற்றும் படிக்கட்டுகள் வலுவிழந்து உதிர்கின்றன. கட்டிடங்கள் மிக மோசமாக உள்ளது. அசம்பாவிதங்கள் நிகழுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். “தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரி யம் உடனடியாக குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்து, அதே இடத்தில் புதிய அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று 139வது வட்ட மாமன்ற உறுப்பினர் ப.சுப்பிரமணி முதலமைச்ச ருக்கு கடிதம் அனுப்பி யுள்ளார்.