செங்கல்பட்டு, ஜன. 20- செங்கல்பட்டு நகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு நகராட்சி நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த 33 வார்டுகள் கொண்ட நகராட்சி ஆகும். சென்னையின் மிக அருகாமையில் தென் மாவட்டங்களில் இருந்து வருப வர்களுக்கு சென்னையின் நுழை வாயிலாகவும் இருப்பதால் இப்பகுதி யில் குடியிருப்புக்களும், மக்கள் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 1886 ஆண்டு பெரிய நத்தம், சின்ன நத்தம், குண்டூர், அனுமந்த புத்தேரி ஆகிய கிராமங்களை கொண்டு தொடங்கப்பட்ட பழமை யான நகராட்சி. 1972ம் ஆண்டு முதல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1984 முதல் முதல் நிலை நகராட்சி யாகவும் செயல்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 15 ஆயிரத்து 675 வீடுகளில் 62 ஆயிரத்து 579 மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இந்த எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சமாக உயர்ந்துள்ள நிலை யில் துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை அதற்கேற்ப அதிகரிக் கப்படவில்லை. செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட நீதி மன்றம், சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு ரயில் நிலைய சந்திப்பு என நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் நகரமாக மாறியுள்ளது. தற்போது புதியதாக அமைக்கப் பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகராகவும் செயல்பட்டு வரும் நிலையில் மாவட்ட தலைநகரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடை பெற்று வருகிறது.
இந்நிலையில் மிக விரைவாக நகரமயமாக்கும் திட்டத்தில் செங்கல்பட்டு நகராட்சி க்கு அருகாமையில் உள்ள கிராமங்களான சிங்கபெருமாள்கோவில், அஞ்சூர், குண்ணவாக்கம், வீராபுரம், தென்மேல் பாக்கம், புலிப்பாக்கம், திம்மாவரம், பழவேலி, ஆலப்பாக்கம், மேலமை யூர், வல்லம், திருமணி, ஒழலூர், பட்ரவாக்கம் உள்ளிட்ட 14 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க அரசு திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. தற்போது குப்பைதொட்டி இல்லா நகரம் என்ற பெயரில் குப்பைத் தொட்டிகள் அனைத்தும் அகற்றப் பட்டுவிட்ட நிலையில் நகரம் முழுவதும் பல இடங்களில் சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு அவை தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் துப்புரவு தொழிலாளர்கள் மீது பழி போடும் நிலை உள்ளது. செங்க ல்பட்டு நகராட்சியில் பல ஆண்டு களுக்கு முன்னர் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் 1998ம் ஆண்டு துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை 195 என நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் தற்போது 88 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஒப்பந்த ஊழியர்கள் 70 பேர் பணியமர்த்த பட்டா லும் அவர்களும் வேறு பணிகளுக்கு ஈடுபடுத்தும் நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் செங்கல்பட்டு நகரப்பகுதிகளில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் பணியமர்த்தப்பட்ட துப்பு ரவு பணியாளர்களின் எண்ணிக்கை வைத்து தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப நகரை தூய்மையாக வைத்திருக்க இயலாது. இந்த பகுதி மாவட்டத்தின் தலைநகராகவும் செயல் படுவதால் நகரை சுத்தமாக பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்பவும், எதிர்காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும் உடனடியாக செங்கல்பட்டு நகராட்சிக்கு கூடுத லான எண்ணிக்கையில் துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.