அம்பத்தூர், ஆக. 10-
ஆவடி மாநகராட்சி பகுதியில் நீதி மன்றம் அமைக்கப்படவேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை யாக உள்ளது.
ஆவடி மாநகரம், வட்டம் (தாலுகா) பகுதி மக்கள், நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி, அம்பத்தூர் நீதிமன்றங்களுக்கு சென்று வரவேண்டி யுள்ளது. இந்த மூன்று ஊர்களுக்கு சென்று வருவதால் நேரம், பண விரயம் ஏற்படுகிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகை யில், ஆவடி, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த காவல் துறையினர், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற விசாரணைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி, அம்பத்தூர் நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டி யுள்ளது. ஆவடியில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பூந்தமல்லி நீதிமன்றமும், பட்டா பிராம் மற்றும் திருநின்றவூர் பகுதியில் இருந்து முறையே 20 கி.மீ, 15 கி.மீ. தூரத்தில் திருவள்ளூர் நீதிமன்றமும், முத்தா புதுப்பேட்டை மற்றும் ஆவடி பீரங்கி தொழிற் சாலை பகுதியில் இருந்து 15 கி.மீ, 10 கி.மீ, தூரத்தில் அம்பத்தூர் நீதிமன்றமும் உள்ளன.
மேலும், பட்டாபிராம், திருநின்றவூர் காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் குற்ற வழக்குகளுக்கு திருவள்ளூரிலும், சிவில் வழக்குகளுக்கு பூந்தமல்லிக்கும் செல்ல வேண்டியுள்ளது. மேற்கண்ட மூன்று நீதிமன்றங்களுக்கு பொதுமக்கள், வழக்கறிஞர்கள் செல்ல காலதாமதமும், பண விரயமும் ஏற்படுகிறது. மேலும், காவல் துறையினர் குற்றவாளிகளை அழைத்துக் கொண்டு நீண்ட தூரம் செல்ல வேண்டி யுள்ளது. இதனால் பல சிரமங்களை அனை வரும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, ஆவடி, பட்டாபிராம் சரக காவல் பகுதிக ளுக்கு ஆவடியின் மையப் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைத்தால் பொதுமக்கள் பல கி.மீ தொலைவு அலைவதை தவிர்க்கலாம் என்றனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகை யில், ஆவடி (தாலுகா) வட்டம் உள்ளிட்ட பகுதிகள் வருவாய் துறை அடிப்படையில் பிரிக்கப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளாக நிர்வா கம் மட்டுமே நடக்கிறது. ஆனால் நீதித்துறை அதிகாரம் அம்பத்தூர், பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய நீதிமன்றங்களில் தான் உள்ளது. இதனை பிரித்து ஆவடி வட்டத்திற்கு அதிகாரத்தை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஆவடி வட்டத்தில் நீதிமன்றத்தை அமைக்க முடியும் என்றார்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கள் ஆவடியில் நீதிமன்றம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், வழக்கறி ஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.