districts

img

வடசென்னைக்கு சிறப்பு திட்டம் ஏன் தேவை

      தலைநகர் சென்னையின் அடித்தளம், அடையாளமாக திகழ்வது வடசென்னை. உழைப்பை முதலீடாக்கி, உற்பத்தியை பல மடங்காக்கி கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் உழைக்கும் மக்களின் வியர்வை பூமி. அலை கடல் மேலே அலையாய் அலைந்து, கடல்சார் பொருளா தாரத்திற்கு கடமையாற்றி, உயிரை துச்சமென கருதும் மீனவமக்களை அன்போடு அனைத்துக்கொண்டு பயணிக்கும் கடலோர நகரம். கல்வி, தொழில், வியாபாரம், விளையாட்டு, எழுத்து, சினிமா, அரசியல் அனைத் திலும் முத்திரை பதித்த சாதனை யாளர்களை தன்வயப்படுத்திக் கொண்ட பன்முக களம். குற்றங்களின் குவிமையம் என்கிற செயற்கை சித்தரிப்புகளை நிராக ரித்து விட்டு, அறிவிலும் ஆற்றலிலும் மேலும் மேலும் முன்னேற துடிக்கும் வட சென்னை மக்களின் இன்றைய தேவை கள் குறித்த ஒரு பொதுவிவாதம் இப்போ தைய சூழலில் மிக மிக அவசியமாகும்.

    வடசென்னையின் வளர்ச்சியை தவிர்த்து விட்டு, ஒதுக்கிவிட்டு எந்த ஆட்சி யும் பயணிக்க முடியாது என்பதை இந்த பொது விவாதம் உணர்த்த வேண்டும். நாம் சார்ந்திருக்கிற அரசியலை தாண்டி, நமது வாழ்விட நகரமாம் வடசென்னைக் கென ஒரு சிறப்பு திட்டத்தை வளர்ச்சி கொள்கையை தயாரித்திட இத்தகைய பொது விவாதம் நிச்சயம் உதவும்.  

    எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சூழலியலாளர்கள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீரர்கள், விமர்சகர்கள், களப் போராளிகள், தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள் என அனைவரும் நமது வாழ்விட நகரின் வளர்ச்சிக் கொள்கை உரு வாக்கத்தில் பங்களித்தால் வடசென்னை புத்தெழுச்சி பெறும் என்பதில் ஐய மில்லை.

பரந்து விரியும் சென்னை

      1639ஆம் ஆண்டிலிருந்தே சென்னைக்கு என்று நீண்ட நெடிய வரலாறு உண்டு என்றாலும் சென்னை மாநகராட்சி  ஆனது 1978 ஆம் ஆண்டு தான். 5.40 லட்சம் மக்களின் வாழ்விடமாக இருந்த  சென்னை, இன்று ஒரு கோடியாக உயர்ந்து நிற்கிறது.

    வேறு மாநிலங்களில் இருந்து சென்னையில் இடம்பெயர்பவர்கள் ஒரு  புறமெனில், சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களில் இருந்தும் சென்னையை நோக்கி வருவது அசுர வேகத்தில் நடை பெறுகிறது. கிராமப்புற வாழ்வாதாரம் நொடிந்து சரிந்து போனதால் கிராமத்தை விட்டு பிழைப்பு தேடி சென்னைக்குள் நுழைவது உழைக்கும் மக்களின் வாழ்வியல் தேவையாகிறது. எந்த ஒரு கிராமவாசியும் சென்னையின் பிர மாண்ட தோற்றத்தை தரிசிக்க விரும்பி சென்னைக்கு வருவதில்லை. பிழைப் புக்கு வழி தேடி சென்னையை நாடி வந்த வர்கள்தான் இந்த உழைப்பாளிகள்.

    நகரமயமாதலின் இத்தகைய சூழலை புரிந்து கொண்டு லட்சக்கணக்கில் சென்னை பெருநகரத்திற்குள் நுழையும் இந்த உழைப்பு படையை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ற வகையில் நகர வளர்ச்சியை உருவாக்கி நகர கட்ட மைப்பை மேம்படுத்துவதில் ஆட்சியாளர் களுக்கு முதன்மை பங்குண்டு. ஆனால் இந்த பிரச்சனைகளை கையாள்வதில் அரசு நிர்வாக அமைப்புகள் பின்னடைந்து கிடப்பது பெரும் ஏமாற்றமே.

நகர கட்டமைப்பு வளர்ச்சிக்கு யார் பொறுப்பேற்பது?

    சென்னை நகரில் வசிக்கக்கூடிய அனைவருக்கும் குடியிருக்கும் வீட்டை உத்திரவாதப்படுத்துவதும், வேலை செய்ய தகுதி உள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவதும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுத்து சாக்கடை கலக்காத சுத்தமான குடிநீர் வழங்குவதும், உயிர் காக்கும் இலவச மருத்துவமும், பொது சுகாதாரமும், நெரிசல் இல்லா பொது போக்குவரத்தும், தரமான இலவச கல்வி யும், கழிவு நீர் தேங்கி அடைப்பு ஏற்படு வதை தடுக்கும் புதிய பாதாள சாக்கடை திட்டமும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றி நோயற்ற வாழ்வை உத்திர வாதப்படுத்துவதும், தரமான சாலை களும், வெள்ளப்பெருக்கு ஏற்படா வண்ணம் மழை நீர் வடிகால் திட்டமும், ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாத்தலும், மாசற்ற காற்று உத்தரவாதமும்,  தடை யற்ற மின்சாரமும் கிடைக்கக்கூடிய திட்ட அமலாக்கம்தான், மக்கள் நலம் சார்ந்த நிலையான நகர கட்டமைப்பை கொண்ட நகர வளர்ச்சி ஆகும்.  

     இவைகள் தான் நிலையான நகர கட்ட மைப்பு வளர்ச்சி என தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்கின்றன. அவ்வாறெனில் ஆள்ப வர்களும், அரசு நிர்வாக அமைப்புகளும் தானே இப்படிப்பட்ட நிலையான நகரகட்டமைப்பு வளர்ச்சியை உருவாக்கமுடியும். ஏன் இதுவரை உரு வாக்கவில்லை?

      1920ல் சென்னை நகரத்திற்கான ஒரு வளர்ச்சி திட்ட சட்டம்  தயாரிக்கப்பட் டது. அதன் பின் 1971இல் தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சி திட்ட சட்டம் உருவாக்கப்பட்டது. 1975ல் சென்னை பெருநகர முதன்மை திட்டம்என்ற பெயரில் 1வது மாஸ்டர் பிளானும், 2008ல் 2வது மாஸ்டர் பிளானும் படாடோபமாக அறிவிக்கப்பட் டன. இப்போது சென்னை பெரு நகரத்திற்கான மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாராகிக் கொண்டிருப்பதாக  முதலமைச்சரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது . ஏற்கெனவே போடப்பட்ட இரண்டு மாஸ்டர் பிளான்கள் சரிவர அமல்படுத்தப் பட்டிருந்தாலே ஓரளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இந்த திட்டங்கள் குறித்தும், இவைகள் அமலாக்கப்பட்டது குறித்தும் ஒரு நேர்மையான ஆய்வு இது வரை நடத்தப்படவில்லை. இப்படிப்பட்ட ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளாமலேயே 3வது மாஸ்டர் பிளான் அறிவிப்பு சென்னை  மக்களுக்கு பயன்படுமா? சென்னை நகரின் கட்டமைப்பில்  தேவையான மாற்ற த்தையும், வளர்ச்சியைம் ஏற்படுத்துமா?

    அதேபோன்று தற்போதைய சிங்காரச் சென்னை 2.0 திட்டம் உட்பட ஏற்கெனவே  அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்துமே சென்னை பெருநகர கட்டமைப்புகளை உலகத் தரத்தில் மாற்றப் போவதாக உறுதி யளித்த திட்டங்களாகும். எழில்மிகு சென்னை, சிங்காரச் சென்னை,  சிங்கப் பூரை போன்று சென்னையை மாற்று வோம் என்று கடந்த காலங்களில் ஆட்சி யாளர்கள் முழங்கியதை எல்லாம் மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

     சாக்கடை கழிவுநீர் கரை புரண்டு ஓடும் கூவம் ஆறும், பக்கிங்காம் கால்வாயும், வரத்து கால்வாய்களும், தொழிற்சாலை களின் கழிவுகளும், குவிந்திருக்கும் குப்பைமேடுகளின் துர்நாற்றமும் வட சென்னையின் தூய்மையையும், அழகை யும் பதம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆட்சியாளர்களின் தூய்மை முழ க்கங்கள் மட்டும் நின்றபாடில்லை.  

    ஒரே மாவட்டத்திற்கு உள்ளே வட சென்னைக்கென்று பிரத்தியேகமாக சிறப்பு திட்டம் கோருவது வடசென்னை - தென் சென்னை என்கிற வேறுபாட்டை உருவாக்காதா? என்று சிலர் கேட்கலாம். மக்கள் தொகை அடர்த்தி என்கிற ஒரே ஒரு விஷயத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். சென்னை நகரத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 33  ஆயிரம் மக்கள் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதில் தென் சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 27 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ஆனால் வட சென்னையின் நிலைமை என்ன தெரியுமா? ஒரு சதுர கிலோமீட்டருக்கு 42 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இது போன்ற வேறுபாடுகளை, நெருக்கடிகளை குடியிருப்பிலும்,  போக்குவரத்திலும், இன்னும் பலவற்றிலும் நிறைய கூற  முடியும்.

     எனவேதான் அரசு மற்றும் மாநக ராட்சி சென்னைக்கென வளர்ச்சி திட்டத்தை உருவாக்கும் போது, நகரின் ஒட்டுமொத்த மக்களின் தேவைகளையும் புரிந்து கொண்டு, அதில் வட சென்னை க்கும், தென் சென்னைக்கும் உள்ள வேறு பாடுகளை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப நகர வளர்ச்சி திட்டங்களை உருவாக்கு வது காலத்தின் தேவையாகும். வட சென்னை மக்களின் இந்த வேண்டு கோள் தேவையில் இருந்தும், அவசி யத்தில் இருந்தும் எழுவதாகும். இதற்கு முன்னுரிமை அளிப்பதுதான் அரசு நிர் வாகத்தின் கடமையாக இருக்க முடியும்.

    நகர வளர்ச்சி என்பது மாட மாளிகை களும், கூட கோபுரங்களும் கட்டுவது அல்ல; ஆற்றை ஆக்கிரமித்து அதானி  போன்ற பெரிய முதலாளிகள் துறை முகம் கட்டுவது வளர்ச்சியாகாது. அனல் மின் நிலையங்களின் கழிவுகளை ஆற்றில் கொட்டி இயற்கை வளங்களை சிதைத்து சின்னாபின்னமாக்குவதும், ஆற்றின் குறுக்கே மின் கோபுரங்களை எழுப்பு வதும் வளர்ச்சியாகாது.

   பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை சூழல், சுற்றுச்சூழல் சார்ந்து நெருக்கடி யில் சிக்கி கஷ்டப்படும் மக்களை மீட்டு கை தூக்கி விடுவதுதான் வளர்ச்சி.

     பாதிக் கப்படும் மக்களை பாதுகாப்பது தான் வளர்ச்சி. நகரமயமாதலை அதன் போக்கி லேயே விட்டுவிட்டு அடிப்படை வசதி களற்ற மிக பலகீனமான நகர கட்ட மைப்பை போற்றி பாதுகாத்து வரும் அரசு நிர்வாகத்தை, தட்டி எழுப்ப வேண்டாமா?  

     இந்த நோக்கத்திற்காகவே வட சென்னை மக்களை வீடு வீடாக சந்திக்கும் மகத்தான இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கியுள்ளது.