districts

வல்லூர் அனல்மின் நிலைய ஊழியர்கள் தொடர் போராட்டம் ஏன்

ஒன்றிய அரசும் தமிழக அரசும் தலா 50விழுக்காடு பங்குகளுடன்  வல்லூர் அனல்மின் நிலையத்தை நடத்தி வருகின்றன.  தேசிய அனல் மின் கழகம் மற்றும் தமிழ் நாடு எனர்ஜி கார்ப்பரேஷன் நடத்தி வரும் இந்த மின் நிலையத்தில் கடந்த  10 ஆண்டுகளுக்கு மேலாக  பணியாற்றி  வரும் ஒப்பந்த தொழிலாளர்கள்,  பணிநிரந்தரம் இல்லாமல் அரசு நிர்ண யித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். வல்லூர் அனல் மின் நிலை யத்தில் தொடர்ச்சியாக மின் உற்பத்தி  நடைபெறும் இடத்தில் சட்டத்திற்கு  விரோதமாக ஒப்பந்த தொழிலாளர் களை வைத்து வேலைவாங்கும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வல்லூர் அனல் மின்  நிலையத்தில் பணியாற்றும் 2000 திற்கும்  மேற்பட்ட தொழிலாளர்களையும் நிரந்தரத் தொழிலாளர்கள் என அறிவிக்க வேண்டும். இதனை தமிழ்நாடு அரசு உடனடி கடமையாக எடுத்து செய்ய வேண்டும் என  வலி யுறுத்தி சிஐடியு சங்கத்தின் சார்பில் வல்லுார் அனல் மின்நிலைய நுழைவு  வாயில் முன்பு தொடர் உண்ணாநிலை போராட்டம் வெள்ளிக்கிழமை (செப்.15)  முதல் நடைபெறவுள்ளது. வல்லூர் அனல் மின் நிலையத் தில் 2022-23 ஆம் ஆண்டில் 79 கோடி  யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு  70 விழுக்காடு மின்சாரமும்,  பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கு 30 விழுக்காடு மின்சாரம் விற்று வந்த பணம் மட்டும் 4230 கோடி ரூபாயா கும். இதில் தேசிய அனல் மின்நிலை யத்திலிருந்து பணிசெய்ய வந்த 300 அதிகாரிகளுக்கு மட்டும் ஊதியம் மற்றும் இதர செலவு என ரூ.104 கோடி யாக ஆண்டுதோறும் செலவ செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் 90 லட்சம் டன் நிலக்கரி இங்கு எரிக்கப்படுகிறது. இந்த நிலக்கரி  காமராஜர் துறைமுகத்திலிருந்து  கன்வேயர் மூலம் 4 கி.மீ துாரம் கொண்டு வந்து எரிக்கப்படுகிறது. இதன்  மூலம் 35 லட்சம் டன் சாம்பல் கையாளப் படுகிறது. நேரடியாக உற்பத்தியில் 500 டிகிரி வெப்பம், நிலக்கரி,  சாம்பல் துாசி, காதை கிழிக்கும் சத்தம், உயரழுத்த மின்சார சாதனங்கள், வேதியியல் பொருட்கள்,  வாயுக்கள், இப்படி அபாயகரமான இடங்களில் எப்பொழுது என்ன ஆகுமோ என்ற அச்சத்துடன்  ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.  நிரந்தர தொழிலாளர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில் ஒப்பந்த தொழி லாளர்கள் வேலை செய்யும்  ஆபத்தான  போக்கு நிலவுகிறது. இதில் பணி யாற்றும் பொறியாளர், அதிகாரிகளின் குடியிருப்பு பகுதிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என அனைவருக்கும் ஏஜென்சி மூலம் அளிக்கப்படும் ஊதியச்செலவு வெறும் ரூ.48 கோடி மட்டும் தான். (இந்த ஊதியத்தில் தொழிலாளியின் போனஸ், ஆண்டு விடுப்பு, வேலையை  விட்டு நீக்கினால் அதற்கான நட்டஈடு அடங்குமாம்) தினம்தோறும் தொழிலாளர்கள்  வேலைக்கு செல்லும் போது நுழைவு வாயிலில் நிற்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (CISF), ஏதாவது காரணத்தை சொல்லி பணிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திவிடுவார்களோ என்ற அச்சத்துடன் தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலாளர்கள், பொறி யாளர்,  தொழில்நுட்ப ஊழியர்கள், இதர தொழிலாளர்கள் அனைவரும் குறைந்த  ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். குடியிருப்பு இல்லை, குழந்தை களை பள்ளிக்கு கொண்டு செல்ல  பேருந்து வசதி இல்லை.

ஆண்டு தோறும் குடியிருப்புகளில் நிர்வாகமே நடத்தும் கலைநிகழ்ச்சிகள் இல்லை. தேசிய அனல் மின்நிலைய அதிகாரி களுக்கு NTECL வல்லுார் அனல் மின்நிலைய மின்உற்பத்தியின் வருமானத்தில் வழங்கும் எந்த சலுகையும் வழங்குவது இல்லை. சாம்பல் விற்று வந்த பணம் சுற்றுப்பற மக்களுக்கு உதவி  செய்வதற்கு என்று ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவினை மதிக்காமல் தனது வருமானமாக காட்டிக்கொள்ளும் NTECL வல்லுார் அனல் மின்நிலைய நிர்வாகம். இதுவரை 1200 கோடி ரூபாய் சாம்பல் விற்ற வகையில் வந்த தொகையின் ஒரு பகுதியை தொழி லாளர்களின் ஊதியமாக மாற்றினாலே தொழிலாளர்களுக்கு சமூக பாது காப்புடன் கூடிய ஊதியத்தை வழங்க முடியும். ஆனால் நிர்வாகம் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. ஒரே காம்பவுண்டுக்குள் மலைக்கும், மடுவுக்கும் ஆன ஊதிய வித்தியாசம் ஏன்? தமிழ்நாடு அரசே பாரபட்ச நிலையை போக்கி,  2000 ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி  நிரந்தரம் செய்ய வேண்டும், அதற்கான  நடவடிக்கையில் இறங்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம்,  NTECL வல்லூர் அனல் மின்நிலையத்திடம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ 5.10 க்கு விலைக்கு வாங்கி 18 சதவீத மின் இழப்பினை ஏற்றுக்கொண்டு  100 யூனிட் இலவச மின்சாரம் உட்பட பலசலுகைகளை வழங்கி வருகின்றது. ஆனால் NTECL வல்லுார் அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும்  மின்சாரம் அனைத்தும்,  அதன் முழு உற்பத்திக்கும் இழப்பீடு ஏதும் இல்லாமல் விற்கப்படுகிறது. NTECL வல்லுார் அனல் மின்நிலையம் மின்மோட்டார்களுக்கு செலவு செய்யும் மின்சாரம் மொத்த உற்பத்தியில் 8 சதவீதம் என்று மார்  தட்டிக்கொள்கிறது. இதற்கு  இந்த  தொழிலாளர்கள் மற்றும்  பொறி யாளர்களின் அப்பழுக்கற்ற கடுமை யான பணிதான் காரணம்.