கடலூர், செப்.4- விலைவாசியை குறை-வேலை கொடு என்ற முழக்கத்தோடு செப் 1 முதல் 6 ந்தேதி வரை மக்கள் மத்தி யில் பிரச்சார இயக்கமும் செப் 7 அன்று மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. பண்ருட்டி, பட்டாம்பக்கம் பேருந்து நிலையம், நெல்லிக்குப்பம் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது, ‘வேலை கொடு விலையை குறை’ என்ற முழக்கத்தை முன் வைக்கின்றோம். இந்த கோரிக்கை அனைத்து தரப்பினருக்கும் விலையை குறைக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது, கொள் கையில் மாற்றம் வந்தால் விலைகளை குறைக்க முடி யும், ஆனால் முடியாது என்கின்ற மாய தோற்றத்தில் ஆட்சியாளர்கள் நம்மை வைத்துள்ளனர். கேஸ் விலை ஏற்றத்தில் விளை வாக பல வீடுகளில் பெண் கள் இன்னமும் விறகு அடுப்பை பயன்படுத்து கின்றனர். கேஸ் வந்ததுக்கு பிறகும் மண்ணெண்ணெய் ஸ்டவையும் விறகு அடுப்பையும் தவிர்க்க முடியவில்லை என்றால் இது என்ன நவீனம். பெட்ரோல், டீசல் மீது போடப்பட்டுள்ள வரியை குறைத்து விட்டாலே தானாக விலை வாசி உயர்வு குறையும். அன்று உப்புக்கு விலை போட்டதற்கு மக்கள் கொதித்து எழுந்தார்கள். இன்று அரிசி, பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு வரி போட்டுள்ளனர். உணவு பொருட்கள் மீது போடப் பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள் ளோம்.
பொதுவிநியோக கடை யில் எல்லா அத்தியாவசிய பொருட்களையும் கிடைப் பதற்கான வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்கின் றோம். பிரதமர் மோடி மனதின் குரலில் பேசும் போது மக்களுக்காக பேச வில்லை. அதானிக்காகவும், அம்பானிக்காவும் தான் பேசி உருகிக் கொண்டி ருக்கிறார். ஏழைகள் கண்ணில் சுண்ணாம்பை யும், பணக்காரர்கள் கண்ணில் வெண்ணையும் தடவிக் கொண்டிருக்கிறார் மோடி. பாஜக ஒன்றிய அரசு ஏழைகளுக்காவோ, மத்திய தர வர்க்கத்திற்காகவோ, சிறு தொழில் செய்பவர் களுக்காகவோ, விவசாயி கள், விவசாய தொழிலாளர் களுக்கான அரசாங்கம் இல்லை. இது பெரும் முதலாளிகளுக்கான அரசாங்கமாக உள்ளது. இந்த அரசாங்கத்தை அகற்றுவது நமது முதற்கடமையாக கொள்ளவேண்டும். வரு கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்த பணியை நாம் செவ்வனேசெய்ய வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.ஆறுமுகம், எஸ்.திருஅரசு, வி. உதயகுமார், வி.சுப்புராயன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ். கே. ஏழுமலை, டி.கிருஷ்ணன், ஜெயபாண்டியன், உத்திராபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.