districts

img

நரிக்குறவர்களுக்காக குரல் கொடுத்தவர் நிலை என்ன?

ஒரு சில தினங்களுக்கு  முன்பு தமிழ்ச்சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகை யில், தலைகுனிவை ஏற்படுத்திய சம்பவம் சென்னை ரோகிணி திரையரங்கில் நிகழ்ந்தது. ரோகிணி திரையரங்கில், நரிக்குறவர் சமூக மக்களை படம் பார்க்க விடாமல் தடுக்கப்பட்டதை எதிர்த்து கேள்வி கேட்டவர் யார் தெரியுமா? அவர் பெயர் விவேக் (எ) விவேகா னந்தன். “டிக்கெட் எடுத்துட்டீங்கல்ல... உள்ள போங்க” என்கிற அறச்சீற்றம் நிறைந்த பேச்சும், அவர்களுக்கு நிகழ்த் தப்பட்ட அவமரியாதையை சமூக ஊட கங்களில் வெளிக்கொண்டு வந்து தமிழ் நாட்டின் மனசாட்சியை உலுக்கினார். பொதுச்சமூகம் மட்டுமின்றி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திரைக்  கலைஞர்கள் கமலஹாசன், விஜய் சேதுபதி, வெற்றிமாறன் ஜி.வி.பிரகாஷ்,  பிரியா பவானி சாகர் உள்ளிட்டோரும் கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதன்  மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. விவேக் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர். இதே அறச்சீற்றத்துடன், தான் பயின்ற சென்னை கிறித்துவக் கல்லூரி (எம்சிசி)யில் நடத்தை விதிகள் என்ற பெயரில் பழமைவாதம் நிறைந்த சுற்றறிக்கையை எதிர்த்து குரல் எழுப்பினார். அதற்காக, நிர்வாகம் அவரை மிக மோசமான முறையில் கையாண்டது. அறச்சீற்றத்தை வெளிப்படுத்தியதற்கு தண்டனையாக ஒரு பருவம் (செமஸ்டர்)  முழுவதும் இடைநீக்கம் செய்தது. தற்போதும் அவர் இடை நீக்கத்தில் தான் உள்ளார். இந்த சமூகத்தை நல்வழியில் இட்டுச்செல்ல அறச்சீற்றம் மிக மிக  அவசியம். அத்தகைய குணம் கொண்ட விவேக்கின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதும் அவசியம். பொதுச்சமூகம் அவரின் கல்வியை பாதுகாக்கவும் குரல் எழுப்ப வேண்டும்.    

           - ச.லெனின்  வாட்ஸ் அப் பதிவிலிருந்து