சென்னை, ஜூலை 20-
மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 குழந்தை தொழிலாளர்களை சென்னையில் அதிகாரி கள் மீட்டனர்.
சென்னையில் உள்ள தொழிற்சாலை, மற்றும் தனியார் நிறுவனங்களில் சென்னை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு அதிகாரிகள், சட்ட விரோதமாக பணி யில் அமர்த்தப்பட்ட குழந்தை தொழிலா ளர்களை மீட்டு அவரவர் உறவினர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இந்த சோதனை வாரம் தோறும் நடைபெறுகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள் ளதாக குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு கூடுதல் செயலாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை மாவட்ட குழந்தைகள் நல தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ரெட்டி ராமன் தெருவில் நகை பட்டறையில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 7 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட 12 மேற்கு வங்கத்தை சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை அதிகாரிகள் மீட்டு அவர்களிடம் விசாரணை நடத்திய போது மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரூ7 முதல் 10 ஆயிரம் வரை அவருடைய பெற்றோர்களுக்கு வழங்கப்படுவதாக குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல் குழந்தைகள் தங்கும் இடம் மற்றும் கழிப்பறைகள் மிகவும் சுகாதார மற்ற நிலையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் மீட்கப்பட்ட குழந்தைகளை காப்ப கத்தில் ஒப்படைத்த அதிகாரிகள், அவர்க ளது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அனைவரையும் சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய நிறுவனத்தின் உரிமை யாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.