ராணிப்பேட்டை, ஜூலை 12 - ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம், பாராஞ்சி மற்றும் பள்ளூர் உள்வட்டம், மின்னல் கிராமத்தில் புத னன்று (ஜூலை. 10) நடை பெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 174 பயனாளி களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வரு வாய் அலுவலர் ந.சுரேஷ் வழங்கினார். இதில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சௌந்தர், மாவட்ட வழங்கல் அலு வலர் ஏகாம்பரம், கலால் உதவி ஆணையர் வரதராஜன், நேர்முக உதவி யாளர் (நிலம்) கலைவாணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், துணை இயக்குநர் (வேளாண் விற்பனை வணிகம்) சீனி ராஜு, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் அனுசியா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீராம்ஜி குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) சரண்யா, வட்டாட்சியர்கள் ஸ்ரீதேவி, சண்முக சுந்தரம், ஊராட்சி மன்றத் தலைவர் கோபி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நீர்நிலைகள், மேய்க்கால் மந்தைவெளி இடங்களுக்கு பட்டா கிடைக்காது! மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ் பேசியதாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 கோட்டங்களில் பட்டா வழங்கும் முகாம்கள் நடத்தி 2000 நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கிட வேண்டுமென அரசு அறிவித்திருந்தது. ஆனால் நமது மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களில் பட்டா வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு அதில் சுமார் 8500 நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகளவில் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் கோரி பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கி வருகின்றனர். நமது மாவட்டத்தில் நீர் நிலை இடங்களும், மேய்க்கால் மந்தைவெளி இடங்களும் அதிகளவில் இருக்கின்றது. இது போன்ற இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பட்டா கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.